ஆப்நகரம்

நெட் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த சிபிஎஸ்இ முடிவு

கல்லூரி உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளருக்கான நெட் தகுதித்தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

TNN 27 Apr 2017, 3:49 pm
டெல்லி : கல்லூரி உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளருக்கான நெட் தகுதித்தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
Samayam Tamil cbse proposes to conduct net once a year over poor response
நெட் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த சிபிஎஸ்இ முடிவு


கல்லூரி உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளருக்கான நெட் தகுதித்தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுக்கு இரு தடவை நடத்தி வந்தது.பொதுவாக நெட் தேர்வானது டிசம்பர் அல்லது ஜனவரி மற்றும் ஜூன் அல்லது ஜூலை ஆகிய மாதங்களில் நடத்தப்படுவது வழக்கம்.

இந்தநிலையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நெட் தகுதி தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்த முடிவு செய்துள்ளது. மிகக்குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் நெட் தேர்வை எழுதுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு சிபிஎஸ்இ கடிதம் எழுதியுள்ளது.

#cbse proposes to conduct #net once a year over poor response.

அடுத்த செய்தி