ஆப்நகரம்

சிபிஎஸ்இ தேர்வில் சாதிச் சண்டையைத் தூண்டும் கேள்வி

சிபிஎஸ்இ தேர்வில் சாதிச் சண்டையைத் தூண்டும் கேள்வி கேட்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Samayam Tamil 12 Mar 2018, 4:48 pm
Samayam Tamil cbse school asks question on caste system
சிபிஎஸ்இ தேர்வில் சாதிச் சண்டையைத் தூண்டும் கேள்வி
சிபிஎஸ்இ தேர்வில் சாதிச் சண்டையைத் தூண்டும் கேள்வி கேட்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் என்.சி.இ.ஆர்.டி எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் வெளியிட்டுள்ள பாடநூலின் அடிப்படையில், அந்நந்த பள்ளிகளே வினாத்தாள்களை தயாரிக்கின்றன.

இந்நிலையில், சிபிஎஸ்இ பள்ளி ஒன்றில் 6ஆம் வகுப்பு சமூகவியல் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. சாதியின் பெயரைக் குறிப்பிட்டு அந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

“வர்ணாசிரம முறையில் மிகவும் தாழ்ந்த சாதி எது?” (What is the lowest caste in the varna system was _____” என்ற எந்த கேள்விக்கான விடைகளாக 1. பிராமணர்கள் 2.சூத்திரர்கள் 3.சத்திரியர்கள் 4.வானப்ரஸ்தர்கள் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.



இந்த வினாத்தாளின் போட்டோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகியுள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ இன்னும் எந்த பதிலும் அளிக்கவில்லை.

அடுத்த செய்தி