ஆப்நகரம்

நாளை மறுநாள் TANCET தேர்வு: அண்ணா பல்கலை.யில் உதவி மையம் திறப்பு!

மாநிலம் முழுவதும் நாளை மறுநாள் டான்செட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு, பிரத்யேகமாக உதவிமையம், தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Jun 2019, 9:56 am
அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான டான்செட் நுழைவுத் தேர்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாணவர்களுக்காக பிரத்யேக உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது
Samayam Tamil anna university.


அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை இன்ஜினியரிங் மற்றும் எம்.பி ஏ. படிப்புகளில் சேர டான்செட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில், இந்தக் கல்வி ஆண்டுக்கான டான்செட் தேர்வுகள், வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. எம்.சி.ஏ மற்றும் எம்.பி.ஏ படிப்புகளுக்கான தேர்வு 22ம் தேதியும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கான தேர்வு 23ம் தேதியும் நடைபெறுகிறது.

டான்செட் தேர்வு தொடர்பாக மாணவர்களின் சந்தேகங்களை நிவரத்தி செய்யும் வகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு மைய வளாகத்தில், பிரத்யேகமாக உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையம் இன்றும் நாளையும் செயல்படும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் திறந்திருக்கும். இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால், 044 22358314 / 22358289 / 22358293 ஆகிய உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

முன்னதாக, டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 8 என்று அறிவிக்கப்பட்டு, மே 31ம் தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டது. தேர்வுக்காக தமிழகத்தில் மொத்தம் 15 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அடுத்த செய்தி