ஆப்நகரம்

சென்னை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி ஏற்பட்டுள்ள மாண்டஸ் புயல் எச்சரிக்கையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எந்தந்த மாவட்டங்களுக்கு விடுமுறை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 9 Dec 2022, 4:05 pm
தமிழகம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையை ஒட்டி மாண்டஸ் புயல் இன்று இரவு கடக்கவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil chennai rain holiday


அரசு சார்பில் அவசிய தேவைகளை தவிர வேறு எதற்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர கூடாது என்று கூறியுள்ளனர். இந்நிலையில் இன்றும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விட்டுள்ளதை தொடர்ந்து நாளையும் சென்னையில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த பள்ளி கல்லூரிகளுக்கு நாளை 10.12.2022 அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி