ஆப்நகரம்

மோடி, சீன அதிபர் வருகை.. பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!

பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Oct 2019, 4:38 pm
பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil school leave


காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்துக்குப் பிரதமர் மோடி, சீன அதிபர் நாளை வருகை தருகின்றனர். இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 20 மாவட்டங்களிலிருந்து சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாமல்லபுரத்தில் காவல் பணியில் குவிக்கப்பட்டுள்ள காவலர்கள், அதிகாரிகள் தங்குவதற்கு போதுமான இடவசதி, அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கவில்லை. எனவே, அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால், காவலர்கள் தங்குவதற்கு வசதியாக இருக்கும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், போக்குவரத்து கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள், பெற்றோர்களும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்திருந்தனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி, சீன பிரதமர் ஷி ஜின் பிங் ஆகியோரது வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 11,12,13 ஆகிய மூன்று நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்திய-சீன பிரதமர் சந்திப்பை நேரில் பார்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,விடுமுறை அளிக்கலாமா வேண்டாமா என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி