ஆப்நகரம்

தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு சேர்க்கைக்கு சிபாரிசு செய்த கல்விஅமைச்சர்

தனியார் பள்ளியில் 1-வகுப்பு சேர்க்கைக்கு மாணவி ஒருவருக்கு தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிபாரிசு கடிதம் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 4 Jun 2017, 2:42 pm
சென்னை : தனியார் பள்ளியில் 1-வகுப்பு சேர்க்கைக்கு மாணவி ஒருவருக்கு தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிபாரிசு கடிதம் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil controvasy in recommentation letter of education minister segottaiyan
தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு சேர்க்கைக்கு சிபாரிசு செய்த கல்விஅமைச்சர்


தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றது அந்த துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளார். 10, 12 வகுப்பு பொது தேர்வு ரேங்க் முறை மாற்றம், எஸ்.எம்.எஸ்-ல் பொதுதேர்வு முடிவுகள் , 11 வகுப்புக்கு பொதுத் தேர்வு என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு நடைமுறைபடுத்தி காட்டினார்.

பள்ளிக்கல்வி அமைச்சரின் இந்த செயல் கல்வியாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார்.தனியார் பள்ளியில் 1-வகுப்பு சேர்க்கைக்கு மாணவி ஒருவருக்கு தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தனது தமிழக அரசின் லேட்டர் பேடில் சிபாரிசு கடிதம் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி