ஆப்நகரம்

வாட்ஸ்அப் குரூப் வழியாக டியூசன் நடத்தும் தனியார் பள்ளிகள்!

TN Schools Shutdown: தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் வாட்ஸ்அப் குரூப் மூலம் டியூசன் எடுத்து வருகிறது.

Samayam Tamil 19 Mar 2020, 10:53 am
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெரிய வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டது. பொதுத்தேர்வுகள் தவிர்த்து மற்ற தேர்வுகள் நடைபெறுமாக என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Samayam Tamil Whatsapp Group


இப்படியான சூழலில் தனியார் பள்ளிகளில் வாட்ஸ்அப் குரூப் மூலம் டியூசன் எடுக்கப்பட்டு வருகிறது. வீட்டுப்பாடம் வழங்குதல், முக்கிய பாடங்களுக்கான கேள்விகள் வழங்குதல், கணித சூத்திரங்கள் போன்றவை வாட்ஸ்அப் குரூப் மூலம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது.

மாணவர்களும் பாடங்களில் உள்ள சந்தேகங்களை வாட்ஸ்அப் குரூப் மூலமாக கேட்க, அதற்கு ஆசிரயர்களும் விளக்கமளித்து வருகின்றனர். இவ்வாறு வாட்ஸ்அப் குரூப் வழியாக டியூசன் எடுப்பது, புதியதொரு அனுபவத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்துவதாக மாணவர்கள் கூறுகின்றனர். மற்ற மாநிலங்களிலும் ஆன்லைன் வகுப்புகள், வாட்ஸ்அப் குரூப் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு நேர்மாறாக அரசுப்பள்ளிகளில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, அரசுப் பள்ளிகளிலும் இதே போல் வாட்ஸ்அப் மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ மாணவர்களுக்கு ஏதாவது பாடம் எடுக்கலாம் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தொய்வு அடையாமல் இருப்பதற்கான வழிவகை ஏற்படும்.

அடுத்த செய்தி