ஐஎஸ்சி தேர்வில் மாநிலத்திலேயே முதல் ஐந்து இடங்களை சென்னை மாணவர்கள் பிடித்துள்ளனர். ஐசிஎஸ்இ தேர்வில் முதல் இடத்தை கோவை மாணவர் பெற்றுள்ளார்.
சென்னையில் ஐஎஸ்சி தேர்வில் சிஷ்யா பள்ளியைச் சேர்ந்த ரோஷினி சந்திரசேகர் 98.75 சதவீதம் (ஆங்கிலம் +மற்றும் மேலும் 3 பாடங்களில் அதிக மதிப்பெண்) பெற்று மாநிலத்திலேயே முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து 2ஆம் இடத்தை 98.25 சதவீத மதிப்பெண்களுடன் அதே பள்ளியைச் சேர்ந்த டெபோரா யாழினி சி பெற்றுள்ளார். இதே பள்ளியைச் சேர்ந்த அத்வைத் ராம் குமார் மற்றும் ராகுல் ஜகன்னாத் இருவரும் 98 சதவீத மதிப்பெண்களுடன் 3ஆம் இடத்தை பெற்றுள்ளனர்.
ஐசிஎஸ்சி தேர்வில் கோவையில் ஸ்டேன்ஸ் பள்ளியைச் சேர்ந்த கைலேஸ்வரி 98.6 சதவீதம் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார் (ஆங்கிலம் + மற்றும் நான்கு பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்)
இவரைத் தொடர்ந்து சென்னை வேல்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியைச் சேர்ந்த ஸ்ருதி ரவிசங்கர் 98.4 சதவீதமும், வேலூர் ஐடா ஸ்கட்டர் பள்ளியைச் சேர்ந்த கீர்த்தனா இனியன் 97.8 சதவீதமும் பெற்றுள்ளார்.
நடப்பாண்டில் தமிழகத்தில் இருந்து 30 பள்ளிகளில் இருந்து ஐஎஸ்சி தேர்வை மொத்தம் 725 மாணவர்கள் எழுதினர். இவர்களில் 412 பேர் மாணவர்கள், 313 பேர் மாணவிகள். மாநிலத்தில் இருந்து 2,975 மாணவர்கள் ஐசிஎஸ்இ தேர்வு எழுதினார்கள். இவர்களில் 1,641 பேர் மாணவர்கள். 1,334 பேர் மாணவிகள். ஐஎஸ்சி தேர்ச்சி சதவீதம் 98.90 சதவீதமாகவும், ஐசிஎஸ்சி தேர்ச்சி சதவீதம் 99.90 சதவீதமாக உள்ளது.
சென்னையில் ஐஎஸ்சி தேர்வில் சிஷ்யா பள்ளியைச் சேர்ந்த ரோஷினி சந்திரசேகர் 98.75 சதவீதம் (ஆங்கிலம் +மற்றும் மேலும் 3 பாடங்களில் அதிக மதிப்பெண்) பெற்று மாநிலத்திலேயே முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து 2ஆம் இடத்தை 98.25 சதவீத மதிப்பெண்களுடன் அதே பள்ளியைச் சேர்ந்த டெபோரா யாழினி சி பெற்றுள்ளார். இதே பள்ளியைச் சேர்ந்த அத்வைத் ராம் குமார் மற்றும் ராகுல் ஜகன்னாத் இருவரும் 98 சதவீத மதிப்பெண்களுடன் 3ஆம் இடத்தை பெற்றுள்ளனர்.
ஐசிஎஸ்சி தேர்வில் கோவையில் ஸ்டேன்ஸ் பள்ளியைச் சேர்ந்த கைலேஸ்வரி 98.6 சதவீதம் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார் (ஆங்கிலம் + மற்றும் நான்கு பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்)
இவரைத் தொடர்ந்து சென்னை வேல்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியைச் சேர்ந்த ஸ்ருதி ரவிசங்கர் 98.4 சதவீதமும், வேலூர் ஐடா ஸ்கட்டர் பள்ளியைச் சேர்ந்த கீர்த்தனா இனியன் 97.8 சதவீதமும் பெற்றுள்ளார்.
நடப்பாண்டில் தமிழகத்தில் இருந்து 30 பள்ளிகளில் இருந்து ஐஎஸ்சி தேர்வை மொத்தம் 725 மாணவர்கள் எழுதினர். இவர்களில் 412 பேர் மாணவர்கள், 313 பேர் மாணவிகள். மாநிலத்தில் இருந்து 2,975 மாணவர்கள் ஐசிஎஸ்இ தேர்வு எழுதினார்கள். இவர்களில் 1,641 பேர் மாணவர்கள். 1,334 பேர் மாணவிகள். ஐஎஸ்சி தேர்ச்சி சதவீதம் 98.90 சதவீதமாகவும், ஐசிஎஸ்சி தேர்ச்சி சதவீதம் 99.90 சதவீதமாக உள்ளது.