ஆப்நகரம்

ஆன்லைனில் செல்போன் ஆடர் செய்தவருக்கு சோப்பு கட்டி அனுப்பி மோசடி !

ஆன்லைனில் செல்போன் ஆடர் செய்தவருக்கு கொரியர் பார்சலில் சோப்பு வந்த சம்பவம் திண்டுகல்லில் நடைபெற்றுள்ளது.

Samayam Tamil 7 Dec 2018, 1:30 pm
ஆன்லைனில் செல்போன் ஆடர் செய்தவருக்கு கொரியர் பார்சலில்சோப்பு வந்த சம்பவம் திண்டுகல்லில் நடைபெற்றுள்ளது.
Samayam Tamil 0


திண்டுகல் அருகில் உள்ள பொன்னகரத்தைசேர்ந்தவர் வெற்றி . உணவகத்தில்வேலை செய்துவரும் அவர்சில நாட்களுக்குமுன்பு ஆன்லைன் மூலம் செல்போன் வாங்குவதற்காக ஒரு தனியார்இணையதள முகவரியில் பதிவு செய்திருந்தார்.ரூ 8, 500 மதிப்புள்ள போனை கொரியர் மூலம் பெறுவதற்காகதனது விட்டின் முகவரியை கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் அவரிடன் வீட்டுக்கு கொரியர் மூலம் ஒருபார்சல் வந்தது.அதனை திறந்து பார்த்த வெற்றி அதிர்ச்சி அடைந்தார். செல்போனுக்கு பதிலாக ஒரு சோப் இருந்தது.செல்போனின் சார்ஜர், ஹெட்போன் ஆகியவை மட்டும் சரியாக இருந்தன.

இதனைத்தொடர்ந்துமோசடி செய்யப்பட்டதாக கூறி, அந்த நிறுவனத்தின் மீதுபுகார் அளிக்க போவதாகவும் வெற்றி தெரிவித்தார்.இதனையடுத்து அந்த கொரியர் பார்சலை கொரியர் நிறுவனத்தின் ஊழியர்மீண்டும் பெற்றுக்கொண்டு, அந்த பணத்தைதிரும்ப செலுத்தினார்.

இதனால் வெற்றிஅந்த நிறுவனத்திற்கு எதிராக புகார் கொடுக்கவில்லை .

அடுத்த செய்தி