ஆப்நகரம்

டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி கலந்தாய்வு இன்று தொடக்கம்

5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கான கலந்தாய்வு டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 23 Jul 2018, 12:22 pm
5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கான கலந்தாய்வு டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
Samayam Tamil 1_PwXaZrVqmx1pgN3IhwbXfQ.


டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரில் 5 ஆண்டு பி,ஏ. எல்.எல்.பி (BA LLB)படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பி.ஏ., எல்.எல்.பிபடிப்புக்கான விண்ணப்பங்கள் இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி விநியோகிக்கப்பட்டது.

மொத்தம் 1, 411 இடங்களுக்கு7, 644 விண்ணப்பங்கள் வந்துள்ளது. இதில் 300 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு கட் ஆப் அடிப்படையில் ராங் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, தபால் மூலம் கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கட் ஆப் விவரவங்கள்

பொதுப்பிரிவினருக்கு : 91.5 சதவீதம் மதிப்பெண்ணும் ,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு: 84.25 %, 83.125% மதிப்பெண்ணும்,எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 79.875% மற்றும் 76.5% மதிபெண்ணும்கட்-ஆப் ஆகநிர்ணயிக்கப் பட்டுள்ளது.

அடுத்த செய்தி