ஆப்நகரம்

பி.இ. கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கும் முறை தொடங்கியது

பொறியியல் படிப்பில் சோ்வதற்கான கலந்தாய்விற்கான ஆன்லைன் விண்ணப்ப முறை இன்று காலை முதல் தொடங்கி உள்ளது.

Samayam Tamil 3 May 2018, 10:38 am
பொறியியல் படிப்பில் சோ்வதற்கான கலந்தாய்விற்கான ஆன்லைன் விண்ணப்ப முறை இன்று காலை முதல் தொடங்கி உள்ளது.
Samayam Tamil Engineering


தமிழகத்தில் முதல் முறையாக அரசு ஒதுக்கீடு பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான பி.இ. கலந்தாய்வு, ஆன்-லைன் மூலம் நடத்தப்பட உள்ளது, இதன் மூலம் மாணவர்கள் தங்களுடைய வீட்டில் இருந்தபடியே ஆன்-லைனில் விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு விண்ணப்பிக்க தெரியாத மாணவர்களுக்காகவும், அசல் சான்றிதழ் சரிபார்ப்பதற்காகவும் தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்கள் இங்கே கிளிக் செய்யவும்: தமிழகம் முழுவதும் உள்ள 42 உதவி மையங்கள்

இந்த மையங்களில் கட்டணமின்றி இலவசமாக ஆன் – லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பபிப்பதற்கு இம்மாதம் 30ம் தேதி கடைசி நாளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதல் வாரத்தில் பி.இ படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது நிலையில், இதற்கான விண்ணபப் பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.

மேலும் விண்ணப்பங்களை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என்று முன்பே அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, https://tnea.ac.in/tneaonline18/index.php என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.


யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு விவரங்களை பதிவு செய்தபின்னர், அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பிறகு கிரடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.

மாணவா்கள் கவனத்திற்கு
மாணவா்கள் ஆன்லைனில் பதிவு செய்வதற்கு முன்பு செல்பொன் எண், இ-மெயில் ஐடி, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று, பிளஸ் 2 ஹால் டிக்கெட், ஆதாா் எண், விண்ணப்ப பதிவு கட்டணம் செலுத்துவதற்கான டெபிட் அல்லது கிரடிட் காா்டு, நெட் பேங்கிங் விவரங்களை தயாராக வைத்திருப்பது நல்ல, மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்கள் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியானதும் அண்ணா பல்கலைக்கழகமே முடிவின் விவரங்களை ஆன்லைன் மூலம் எடுத்துக கொள்ளும்.

சி.பி.எஸ்.இ. மூலம் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்கள் மட்டும் தோ்வு முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும். இணையத்தில் முறையாக விண்ணப்பத்தை பதிவு செய்தவுடன் விண்ணப்பத்தை பிரண்ட்அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அடுத்த செய்தி