ஆப்நகரம்

அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கவுன்சிலிங் ஆன்லைனில் நடைபெறுகிறது

அடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஆன்லைனில் நடத்துமாறு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

TNN 10 Nov 2017, 11:41 am
அடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஆன்லைனில் நடத்துமாறு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil engineering counselling will be conducted in online from next year
அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கவுன்சிலிங் ஆன்லைனில் நடைபெறுகிறது


அடுத்த கல்வியாண்டு முதல் பி.இ, பி.டெக், பி.ஆர்க், எம்.இ, எம்.டெக், எம். ஆர்க், உள்ளிட்ட படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தி, மாணவர் சேர்க்கையை நடத்துமாறு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு உத்தரவு பிரப்பித்துள்ளது

அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், கலந்தாய்வில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் சென்னைக்கு வந்து செல்ல சிரமப்படுவதால் ஆன்லைன் முறையில் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று அரசிடம் கேட்டுக் கொண்டிருந்தார். இதன் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைனில் கலந்தாய்வு நடத்துவதற்கு உதவும் மென்பொருளை வடிவமைக்கும் பணி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆன்லைன் கலந்தாய்வின் பொறுப்பை பார்த்துக் கொள்வதற்காக பேராசிரியர் ரைமண்ட் உதரியராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். மொத்தம் 14 பேர் கொண்ட குழுவினர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆன்லைனில் கலந்தாய்வு நடத்துவதால் கிராமபுற மாணவர்களும் புறநகர் மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதில் ஏமாற்றுவேலை நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

engineering counselling will be conducted in online from next year

அடுத்த செய்தி