ஆப்நகரம்

பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக வளர்மதி நியமனம்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார்.

TNN 7 Jan 2017, 9:32 pm
சென்னை: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil ex minister p valarmathi appointed as tamilnadu textbook and educational services corporation chairperson
பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக வளர்மதி நியமனம்


தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து அச்சிட்டு விநியோகம் செய்வதற்காகத் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனம் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.

இந்நிலையில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சபீதா பிறப்பித்துள்ளார்.

கடந்த 2011-16 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி, கடந்த 2016-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ex minister P Valarmathi appointed as Tamilnadu Textbook and Educational services Corporation chairperson

அடுத்த செய்தி