ஆப்நகரம்

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு இலவச பி.இ., பி.டெக்.

பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும் ஆயிரம் மாணவிகளை தேர்வு செய்து ,அவர்களுக்கு இந்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இலவச பி.இ பி.டெக் படிக்க ‘உதான்’ திட்டதின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

TNN 9 Jul 2016, 4:47 pm
டெல்லி:பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும் ஆயிரம் மாணவிகளை தேர்வு செய்து ,அவர்களுக்கு இந்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இலவச பி.இ பி.டெக் படிக்க ‘உதான்’ திட்டதின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil free b e b tech for girls students in udhaan scheme
உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு இலவச பி.இ., பி.டெக்.


மத்திய அரசு பெண்களின் கல்வி நிலைய மேம்படுத்தும் பொருட்டு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகளுக்கான ‘உதான்’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. கேந்திர வித்தியாலயா,ஜவஹர் நவோதயா வித்தியாலயா, சிபிஎஸ்சி எனப்படும் மத்திய இடைநிலை கல்விவாரிய பள்ளிகள் மற்றும் மாநில அரசின் பாடத்திட்டப் பள்ளிகளில் பயிலும் பதிரொன்றாம் வகுப்பு மாணவிகள் இதன் மூலம் பயன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பும் மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வில் 70% மதிப்பெண் மற்றும் கணிதம், அறிவியல் பாடங்களில் 80% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பதிரொன்றாம் வகுப்பில் அறிவியல்,கணிதம் பாடப்பிரிவில் சேர்ந்திருக்க வேண்டும்.

உதான் திட்டத்தில் சேரும் மாணவிகளுக்கு இரண்டு ஆண்டுகள் ஆன்லைன் மூலமாக சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது புத்தகங்கள், டேப்லேட் போன்றவை இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் சேர விரும்புவர்கள் ஜுலை 13ம் தேதி வரை http://cbseacademic.in/ என்ற இணைய தளம் மூலமாக விண்ணபிக்கலாம்.

அடுத்த செய்தி