ஆப்நகரம்

சென்னையில் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி மார்ச் 31ல் தொடக்கம்

டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்கம் மார்ச் 31ம் தேதி முதல் சென்னையில் நடைபெறுவதாக பெரியார் ஐஏஎஸ் அகாடமி தெரிவித்துள்ளது.

Samayam Tamil 26 Mar 2019, 6:19 pm
டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்கம் மார்ச் 31ம் தேதி முதல் சென்னையில் நடைபெறுவதாக பெரியார் ஐஏஎஸ் அகாடமி தெரிவித்துள்ளது.
Samayam Tamil 20MACITYTNPSCEXAm


டிஎன்பிஎஸ்சி மற்றும் இந்திய குடிமைப் பணி ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என்றால் தனியார் நடத்தும் பயிற்சி மையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் இதுபோன்ற போட்டித் தேர்வுகளுக்கென தனியார் தேர்வு மையங்கள் தொடர்ந்து பயிற்சி வகுப்புகள் நடத்தினாலும், அவர்கள் வசூலிக்கும் கட்டணம் மிக அதிகமாக உள்ளது. இந்நிலையில் பெரியார் ஐஏஎஸ் அகாடமி சென்னையில் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை வருகின்ற 31ம் தேதி முதல் நடத்துகிறது.

இதுகுறித்து பெரியார் ஐஏஎஸ் அகாதமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்படுள்ளதாவது:
டிஎன்பிஎஸ்சி, இந்திய குடிமைப் பணி ஆகியவை நடத்தும் அரசுப் பணித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்கம் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் மார்ச் 31-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
அன்றைய தினம் காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கத்தில், போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளனர். இதில் பங்கேற்க விரும்புவோர் 044-2661 8056, 99406 38537 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்படுள்ளது.

அடுத்த செய்தி