திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், கே.எல்.கே. தொடக்கப் பள்ளி வளாகத்தில் டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படுகின்ற போட்டித் தேர்வுகளுக் கான இலவச பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், “திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படுகின்ற குரூப்-1, குரூப்-2, குரூப்-2(ஏ) மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக இலவச பயிற்சி வகுப்புகள் வாரம்தோறும் சனி மற்றும்ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படுகிறது.
வரும் 2018 பிப்ரவரி முதல் வாரம் வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பயனடைய வேண்டும்” என்று கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், “திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படுகின்ற குரூப்-1, குரூப்-2, குரூப்-2(ஏ) மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக இலவச பயிற்சி வகுப்புகள் வாரம்தோறும் சனி மற்றும்ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படுகிறது.
வரும் 2018 பிப்ரவரி முதல் வாரம் வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பயனடைய வேண்டும்” என்று கூறினார்.