ஆப்நகரம்

தொழிற்பள்ளிகள் தொடங்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தொழிற் பள்ளிகள் புதிதாக துவங்கவும் , அங்கீகார நீட்டிப்பு ஆணை பெறவும் விரும்புபவர்கள் விண்ணப்பத்தினை இணையதளம் மூலமாகவே 30.04.2017க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

TNN 22 Apr 2017, 10:31 am
சென்னை : தொழிற் பள்ளிகள் புதிதாக துவங்கவும் , அங்கீகார நீட்டிப்பு ஆணை பெறவும் விரும்புபவர்கள் விண்ணப்பத்தினை இணையதளம் மூலமாகவே 30.04.2017க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil from the directorate of employment and training industrial school application registration
தொழிற்பள்ளிகள் தொடங்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் , " தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் தனியார் தொழிற் பள்ளிகளில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 54 நீண்ட கால தொழிற் பிரிவுகள், மற்றும் 36 குறுகிய கால தொழிற் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

புதிதாக தொழிற் பள்ளிகள் துவங்குவதற்கான அங்கீகாரம் வழங்கவும் ஏற்கனவே அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் தொழிற் பள்ளிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு ஆணை வழங்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 2 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2016-2017 ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் விண்ணப்பங்கள் இத்துறையின் மண்டல இணை இயக்குநர் அலுவலகங்கங்கள் மூலமாக வழங்கப்பட்டு, தகுதியுள்ள பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது. மண்டல இணை இயக்குநர்அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கும் நடைமுறையில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு தொழிற் பள்ளிகளுக்கான அங்கீகார நீட்டிப்பு (renewal) மற்றும் புதிதாக தொழிற் பள்ளிகள் துவங்குவதற்கு விருப்பமுள்ளவர்கள் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவிண்ணப்பங்கள் இத்துறையில் பெறப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் விண்ணப்பிக்க கடைசி தேதியானது 30.04.2017 என நிர்ணயம் செய்யப்பட்டு விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டு வருகிறது. எ

எனவே தொழிற் பள்ளிகள் புதிதாக துவங்கவும்அங்கீகார நீட்டிப்பு ஆணை பெறவும் விரும்புபவர்கள் விண்ணப்பத்தினை இணையதளம் மூலமாகவே 30.04.2017க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.அங்கீகாரம் வழங்கும் முறையை எளிதாக்கவும், வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளவும் இணையதளம் வாயிலாக செயல்படுத்தப்படுவதால் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
From the Directorate of Employment and Training - Industrial School Application Registration

அடுத்த செய்தி