2109ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 21 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், அபராதத் தொகையோடு விண்ணபிக்க வேண்டிய கடைசி நாளும் இன்றுடன் முடிவடைகிறது.
கேட் தேர்வு என்பது இந்தியாவில் உள்ள ஐஐடி, என்ஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ, எம்.டெக் படிக்க மத்திய அரசால் நடத்தப்படகிறது.
கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பி.எச்.சி.எல், ஐ.ஒ.சி.எல், ஓ.என்.ஜி.சி, கேல் போன்ற நிறுவனங்களில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அந்தவகையில், 2019ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் கேட் தேர்வை ஐஐடி மெட்ராஸ் நடத்த உள்ளது. பிப்ரவரி மாதம் 2, 3, 9, 10 ஆகிய தேதிகளில் கேட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 பாடங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
இந்த வருடம் புதிதாக ஸ்டடிஸ்டிக்ஸ் தொடர்பான பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதி கேட் தேர்வின் ஹால் டிக்கெட் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் தேர்வு முடிந்த 45 நாட்களுக்குள் முடிவுகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கேட் தேர்வு என்பது இந்தியாவில் உள்ள ஐஐடி, என்ஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ, எம்.டெக் படிக்க மத்திய அரசால் நடத்தப்படகிறது.
கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பி.எச்.சி.எல், ஐ.ஒ.சி.எல், ஓ.என்.ஜி.சி, கேல் போன்ற நிறுவனங்களில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அந்தவகையில், 2019ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் கேட் தேர்வை ஐஐடி மெட்ராஸ் நடத்த உள்ளது. பிப்ரவரி மாதம் 2, 3, 9, 10 ஆகிய தேதிகளில் கேட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 பாடங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
இந்த வருடம் புதிதாக ஸ்டடிஸ்டிக்ஸ் தொடர்பான பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதி கேட் தேர்வின் ஹால் டிக்கெட் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் தேர்வு முடிந்த 45 நாட்களுக்குள் முடிவுகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.