ஆப்நகரம்

நவ.9ஆம் தேதி குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் குரூப்-1 குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNN 6 Nov 2016, 4:35 pm
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் குரூப்-1 குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil group 1 exams announcement will be released on nov 9
நவ.9ஆம் தேதி குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு


தமிழகம்‌ முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு நடைபெற்றது. அதில், முன்னெப்போதும் இல்லாத அ‌ளவிற்கு 15 லட்சத்து 64 ஆயிரத்து 471 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தலைவர் அருள்மொழி கூறுகையில்,'வருகிற நவ.9ஆம் தேதி வெளியாகும்' என தெரிவித்துள்ளார்.

மேலும், 85 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பினை தேர்வர்கள் http://www.tnpsc.gov.in என்ற இளையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை எழுதுபவர்கள் இணையதளத்தில் ‌நாளை அறிவிக்கப்பட உள்ள திருத்தியமைக்கப்பட்ட வரையறையை தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

அடுத்த செய்தி