ஆப்நகரம்

டிச.7ல் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வு தொடக்கம்.!

தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு வரும் வியாழக்கிழமை(டிச.7) தொடங்குகிறது.

TNN 5 Dec 2017, 12:16 pm
தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு வரும் வியாழக்கிழமை(டிச.7) தொடங்குகிறது.
Samayam Tamil half yearly exam for tamilnadu scholl students
டிச.7ல் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வு தொடக்கம்.!


10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் 7-ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கி 23-ம் தேதியுடன் முடிகிறது. இதில் பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிகிறது.

மேற்கண்ட மூன்று வகுப்புகளுக்கு மட்டும் பொது வினாத்தாள் மூலமாக அனைத்து பள்ளிகளிலும் தேர்வுகள் நடக்கும். இதனையொட்டி, அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே கேள்வித்தாள் அனுப்பும் பணியும் துவங்குகிறது.

1ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் கல்வி கொண்டு வரப்பட்டு அதற்கான பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டும் உள்ளது. ஆனால், வகுப்புகளுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கப்படாததால் இந்த பாடங்கள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.

ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வுக்கான வினாத்தாள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. டிச. 7ல் தொடங்கும் தேர்வுகள் 23-ம் தேதிக்குள் முடிவடையும் என்று மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி