ஆப்நகரம்

காஷ்மீர் மாணவிக்கு ஹாரி பாட்டர் எழுத்தாளர் கொடுத்த பரிசு

ஜம்மு காஷ்மீரில் பள்ளி மாணவி ஒருவருக்கு உலகப் புகழ்பெற்ற ஹாரி பாட்டார் தொடர் கதை எழுத்தாளர் பரிசுகளை அனுப்பி வைத்துள்ளார்.

Samayam Tamil 24 Jun 2018, 7:44 pm
ஜம்மு காஷ்மீரில் பள்ளி மாணவி ஒருவருக்கு உலகப் புகழ்பெற்ற ஹாரி பாட்டார் தொடர் கதை எழுத்தாளர் பரிசுகளை அனுப்பி வைத்துள்ளார்.
Samayam Tamil DgX0Eg9XUAA1ifM


ஜம்மு காஷ்மீரில் ஹாஜி பப்ளிக் ஸ்கூலில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவி குல்சம். இவர் தனக்குப் பிடித்த எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங்குக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஏப்ரல் மாதம் அவர் எழுதிய கடிதத்தை அவரது ஆசிரியர் என்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த எழுத்தாளர் ரௌலிங் மாணவி குல்சமுக்கு ஒரு பரிசு அளிக்க விரும்பவதாகக் கூறினார்.
இதன்படி, அவர் அனுப்பிய பரிசுகள் மாணவி குல்சமுக்கு சனிக்கிழமை கிடைத்துள்ளது. ஹாரி பாட்டர் தொடர்கதையின் ஒட்டுமொத்த தொகுப்பு உட்பட பல புத்தங்களையும் ஒரு கடிதத்தையும் ரௌலிங் குல்சமுக்கு அனுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி