ஆப்நகரம்

IIT Madras: எப்படி முதலீடு செய்யலாம்? ஐடியா கொடுக்கும் பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள் படிப்பை முடிந்து தொழில் தொடங்க ஊக்குவிக்கும் நோக்கில் ஐஐடியின் தொழில்முனைவோர் பிரிவு 'E21' என்ற விழிப்புணர்வு முயற்சியை முன்னெடுத்துள்ளது.

TIMESOFINDIA.COM 20 Feb 2019, 4:27 pm
சென்னை ஐஐடியில் நடக்கும் தொழில்முனைவோர் மாநாட்டில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் பங்கேற்று திட்ட மாதிரிகளை சமர்ப்பிக்க உள்ளனர்.
Samayam Tamil iim e


சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. மெட்ராஸ் வரும் மார்ச் 8 முதல் 10 வரை தொழில்முனைவோர் மாநாட்டை நடத்துகிறது. இதில் பள்ளி மாணவர்களும் பங்கேற்க உள்ளனர்.

பள்ளி மாணவர்கள் படிப்பை முடிந்து தொழில் தொடங்க ஊக்குவிக்கும் நோக்கில் ஐஐடியின் தொழில்முனைவோர் பிரிவு 'E21' என்ற விழிப்புணர்வு முயற்சியை முன்னெடுத்துள்ளது.

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்புடன் இணைந்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 1,600 மாணவ மாணவிகளைத் தேர்ந்தெடுத்து சிறப்பு பயற்சி அளித்துள்ளது. இதே போல டெல்லி, அகமதாபாத் மற்றும் சோலாபூர் ஆகிய நகரங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு பயற்சி வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பயற்சியில் மாணவ மாணவியர் தொழில் தொடங்குவதற்கான திட்ட மாதிரிகளை உருவாக்குவது பற்றி கற்பிக்கப்படுகின்றனர். குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு வழிகாட்டியை நியமித்துள்ளனர். ஒவ்வொரு குழுவின் சார்பிலும் தயாரிக்கபடும் தொழில் தொடங்குவது ரீதியான திட்ட மாதிரிகளை மார்ச் மாதம் நடக்கும் மாநாட்டில் வெளியிடப்படும்.

தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்ளும் பல முதலீட்டாளர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்படும் மாணவர்கள் உருவாக்கிய மாதிரித் திட்டங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

அடுத்த செய்தி