ஆப்நகரம்

சென்னை , மதுரை பல்கலை., துணை வேந்தரை நியமிக்க நேர்காணல்

சென்னை , அண்ணா மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகளுக்கான துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNN 26 May 2017, 12:56 pm
சென்னை : சென்னை , அண்ணா மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகளுக்கான துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வருவதாக தகவலகள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil interview for vc selection in raj bhavan
சென்னை , மதுரை பல்கலை., துணை வேந்தரை நியமிக்க நேர்காணல்


சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாகவும்,மதுரை காமராஜர் பலகலைக்கழகத்திற்கு இரண்டாண்டுக்கு மேலாகவும் , அண்ணா பலகலைக்கழத்திற்கு ஓராண்டுகள் மேலாகவும் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டாமல் உள்ளனர். இந்தநிலையில் இந்த மூன்று பலகலைக்கழங்களிலும் துணை வேந்தரை தேர்வு செய்ய தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டனர்.

இந்த தேடல் குழுவானது துணை வேந்தர் பதவிக்கு தகுதியான மூன்று நபர்களை தேர்வு செய்து கடந்த 21-ம் தேதி ஆளுநரிடம் அறிக்கை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் இந்த மூன்று பல்கலைக்கழங்களுக்கான துணை வேந்தரை நியமனம் செய்வதற்கான நேர்காணல் நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி