ஆப்நகரம்

ஐ.டி.ஐ மாணவர் சேர்க்கை : விண்ணபிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

சென்னை : ஐ.டி.ஐ மாணவர் சேர்க்கை விண்ணபிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

TNN 18 Jul 2017, 10:43 pm
சென்னை : ஐ.டி.ஐ மாணவர் சேர்க்கை விண்ணபிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil iti counselling impartant announcement
ஐ.டி.ஐ மாணவர் சேர்க்கை : விண்ணபிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு


ஆகஸ்ட் 2017-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார்தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் உள்ள சேர்க்கையிடங்களை நிரப்பிட முதற்கட்டமாக விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 10.05.2017 முதல் பெறப்பட்டு மாவட்ட கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெற்றன.

இந்த முதல் வாய்ப்பில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காகவும் இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பிடவேண்டியும் விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக17.07.2017 முதல் மீண்டும் வரவேற்கப்படுகிறன்றன. 17.07.2017 முதல் 10.08.2017 வரை மாணவர்கள் இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்துக்கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்.

இணையதளத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என்ற விவரம் தரப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி:10.08.2017.மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட கலந்தாய்வுக்கான நிகழ்ச்சி நிரல் விண்ணப்பதாரர் சமர்ப்பித்துள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

மேலும் இவ்விவரங்கள் இதே இணையதளத்திலும் பின்னர் வெளியிடப்படும். அந்த நிகழ்ச்சி நிரலின் படி மாணவர்கள் Single Window முறையில் தாங்கள் சேர விரும்பும் தொழிற்பிரிவு மற்றும் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டு தேர்வு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி