ஆப்நகரம்

ஜேஇஇ முதன்மைத் தேர்வு: ஆந்திர மாணவர் முதலிடம்!

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சூரஜ் கிருஷ்ணா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.

Samayam Tamil 30 Apr 2018, 11:40 pm
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சூரஜ் கிருஷ்ணா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.
Samayam Tamil 63976919


ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.) இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். பின், முதன்மைத் தேர்வு (அட்வான்ஸ்டு) நடத்தப்படும்.

முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி. போன்ற மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் சேரலாம். ஜேஇஇ முதல்நிலைத் தேர்வில் முதல் 1.5 லட்சம் இடங்களைப் பிடிப்பவர்கள் அடுத்து நடத்தப்படும் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் பங்கேற்கும் தகுதியைப் பெறுவர்.

அதிலும் வெற்றி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கலாம். 2018ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் நாடு முழுவதும் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கு பெற்றனர்.

இன்று இத்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேரந்த சூரஜ் கிருஷ்ணா போகி என்பவர் தேசிய அளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். இரண்டாவது இடத்தையும் ஆந்திராவைச் சேர்ந்த ஹேமந்த் குமார் என்பவர் பெற்றுள்ளார். 3வது இடத்தை ராஜஸ்தானைச் சேர்ந்த பர்த் லதூரியா என்பவர் பிடித்திருக்கிறார்.

இத்தேர்வு முடிவுகளை www.jeemain.nic.in, Cbseresults.nic.in என்ற இணையதளங்களில் பார்த்து அறிந்து கொள்ளலாம். நாளை இரண்டாம் தாள் முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி