ஆப்நகரம்

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 3ஆம் கட்ட கலந்தாய்வு 31ஆம் தேதி

மொத்த இடங்களில் இன்னும் 20 இடங்கள் மட்டுமே உள்ளன. முதல் இரண்டு கலந்தாய்வுகளில் தங்கள் பெயரைப் பதிவு செய்து இடம் கிடைக்கதவர்கள் மட்டுமே இந்த கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.

Samayam Tamil 26 Jul 2019, 5:03 pm
புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 31ஆம் தேதி நடக்க உள்ளது.
Samayam Tamil 09THJIPMERENTRANCE


புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க ஆண்டுதோறும் தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. 2019ஆம் ஆண்டு மாணவர் சோ்க்கைக்கான நுழைவுத் தேர்வு மே 18ஆம் தேதி நடைபெற்றது.

இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மூன்று கட்டங்களாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 12ஆம் தேதியும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 11ஆம் தேதியும் நடந்து முடிந்தன. இதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் ஜூலை 31ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் தேவையான அசல் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இது தொடர்பாக ஜிப்மர் மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மொத்த இடங்களில் இன்னும் 20 இடங்கள் மட்டுமே உள்ளன. முதல் இரண்டு கலந்தாய்வுகளில் தங்கள் பெயரைப் பதிவு செய்து இடம் கிடைக்கதவர்கள் மட்டுமே இந்த கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.

மேலும் விவரங்களுக்கு மூன்றாவது கட்ட கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கீழ்க்காணும் இணைப்பில் பார்க்கலாம்.
http://jipmer.edu.in/sites/default/files/MD.MS%20THIRD%20COUNSELING%20NOTICE.pdf

அடுத்த செய்தி