ஆப்நகரம்

பிரதமருக்கு கடிதம்: கர்நாடக மாணவிக்கு கிடைத்தது கல்விக் கடன்

கல்விக் கடன் பெற உதவி புரியுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பெண்ணுக்கு ரூ.1.5 லட்சம் கல்விக் கடன் கிடைத்துள்ளது.

TNN 22 Mar 2017, 2:55 pm
மாண்டியா: கல்விக் கடன் பெற உதவி புரியுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பெண்ணுக்கு ரூ.1.5 லட்சம் கல்விக் கடன் கிடைத்துள்ளது.
Samayam Tamil karnataka girl gets education loan after writing letter to pmo
பிரதமருக்கு கடிதம்: கர்நாடக மாணவிக்கு கிடைத்தது கல்விக் கடன்


கர்நாடக மாநிலம் மாண்டியாவை சேர்ந்த எம்பிஏ படிக்கும் பீபி சாரா எனும் மாணவி, சென்ட்ரல் பாங் ஆஃப் இந்தியாவில் கல்விக் கடன் கோரி விண்ணப்பித்திருந்ததாக தெரிகிறது. ஆனால், முந்தைய கடனை கட்டி முடித்தால் தான் மேற்கொண்டு கடன் வழங்க முடியும் என அவரது கோரிக்கையை வங்கி நிராகரித்துள்ளது.

தனது தந்தைக்கு சுமார் எட்டு மாத காலமாக சம்பளம் வராத நிலையில், கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் மாணவி பரிதவித்துள்ளார். இத்தகைய சூழலில் பிரதமரின் பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் (பெண் குழந்தைகளைக் காப்போம், கற்பிப்போம்) என்ற திட்டத்தின் கீழ் தனக்கு உதவுமாறு கடிதம் எழுதியுள்ளார்.

இதனையடுத்து அடுத்த பத்து நாட்களுக்குள் மாணவிக்கு பிரதமரிடம் இருந்து பதில் கடிதம் வந்துள்ளது. அதில், மாணவியின் கடிதம் கிடைத்ததாகவும், விஜயா வங்கியில் கல்விக் கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தை அவரது தந்தை விஜயா வங்கிக்கு கொண்டு சென்றுள்ளார். வங்கியில் அவர்களது ஆவணங்கள், பின்புலம் உள்ளிட்டவைகள் சரி பார்க்கப்பட்டு, கல்விக் கடன் பெற தகுதியுள்ளவர் என்பதால் மாணவிக்கு ரூ.1.5 லட்சம் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
Karnataka girl gets education loan after writing letter to PMO

அடுத்த செய்தி