ஆப்நகரம்

உயர்கிறது சட்டப் படிப்பு சேர்க்கைக்கான வயது வரம்பு

சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை இந்திய பார் கவுன்சில் உயர்த்தியுள்ளது.

TNN 3 Mar 2017, 3:40 pm
சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை இந்திய பார் கவுன்சில் உயர்த்தியுள்ளது.
Samayam Tamil law admissions 2017 bar council of india increases upper age limit
உயர்கிறது சட்டப் படிப்பு சேர்க்கைக்கான வயது வரம்பு


இந்திய பார் கவுன்சில் சட்டக் கல்வி குறித்தான கூட்டம் கடந்த புதன்கிழமை நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை உயர்த்துவதற்கான ஆலோசனை நடைப்பெற்றது.

இந்த கூட்டத்தில் ஐந்தாண்டுகள் சட்டப்படிப்பில் சேர்வதற்கான அதிகப்பட்ச வயது வரம்பை 20-லிருந்து 22 ஆகவும், மூன்றாண்டுகள் சட்டப்படிப்பில் சேர்வதற்கான அதிகப்பட்ச வயது வரம்பை 30-லிருந்து 45ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

2017-2018-ம் கல்வியாண்டில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த அதிகப்பட்ச வயது வரம்பு பொருந்தும் என்று இந்திய பார்கவுன்சில் அறிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரங்களுடன் தொடர்புடைய அனைவரது கருத்துக்களும் கேட்கப்பட்டு இது குறித்து இறுதி முடிவு செய்யபடும் என்று பார் கவுன்சில் அறிவித்துள்ளது.

law Admissions 2017 : Bar Council Of India Increases Upper Age Limit

அடுத்த செய்தி