ஆப்நகரம்

தனியார் பள்ளி இட ஒதுக்கீட்டில் தேர்வானவர்கள் பட்டியல் மே 31ல் வெளியீடு

இந்த ஆண்டு மாணவர் மாணவர் சேர்க்கையில் தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு மூலம் தேர்வான மாணவர்களின் பட்டியல் மே 31ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன என மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 29 May 2019, 8:29 pm
25% இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் தேர்வான சிறப்பு பிரிவினர் பட்டியல் மே 31இல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil CBSE


இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 2019-20 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கையில் 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகள் தொடக்கநிலை வகுப்புகளில் உள்ள மொத்த இடங்களில் 25 சதவீதம் இடங்கள் ஆன்லைன் மூலம் நிரப்பப்பட்டன.

ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை இந்த இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க பெற்றோர்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு மாணவர் மாணவர் சேர்க்கையில் தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு மூலம் தேர்வான மாணவர்களின் பட்டியல் மே 31ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன என மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

http://rte.tnschools.gov.in/என்ற இணையதளத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் இந்தப் பட்டியல் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி