ஆப்நகரம்

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி திட்டம்: 21ஆம் தேதி துவக்கி வைக்கும் முதல்வர்!

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் துவங்கும் திட்டத்தை, சென்னை எழும்பூரில் உள்ள அரசினர் மாநில மகளிர் பள்ளியில் ஜனவரி 21ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

Samayam Tamil 12 Jan 2019, 12:42 pm
அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும்யு.கே.ஜி. வகுப்புகள் துவங்கும் திட்டத்தை, சென்னை எழும்பூரில் உள்ள அரசினர் மாநில மகளிர் பள்ளியில் ஜனவரி 21ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
Samayam Tamil download (4)


தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன், 4 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அங்கன்வாடிகளைஇணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

முதல் கட்டமாக மாநில அளவில் 2 ஆயிரத்து 381 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன், அருகருகே உள்ள அங்கன்வாடிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கை தீவிரமாகநடைபெற்று வருகிறது.

இந்த பள்ளி வளாகங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்கி சிறுவர், சிறுமியரை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கன்வாடிகள் இணைக்கப்பட்ட பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு கூடுதலாக ஆசிரியர்களை நியமனம் செய்யவும்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, வரும் 21ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள அரசினர் மாநில மகளிர் பள்ளியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்கி வைக்க உள்ளார்.

அடுத்த செய்தி