ஆப்நகரம்

ஆமை வேகத்தில் நடைபெறும் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம்!

ஆமை வேகத்தில் நடைபெறும் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம்!

TNN 22 Feb 2017, 11:07 pm
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் நியமனத்திற்காக மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆன நிலையில் இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு காரணம் அரசியல் அழுத்தம் என்றும் பேரம் பேசுவது என்றும் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து இது வரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் நியமிக்கப்படவில்லை. அதனால் நிர்வாக பணிகள் அனைத்தும் மந்த கதியில் நடைபெறுவதாகவும், பதவிக்காக 10 கோடி ரூபாய் வரை பேரம் நடப்பதாகவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்.பசுபதி கூறியிருக்கிறார்.
Samayam Tamil lobbying and bargaining slow down madras university vc selection teachers association say
ஆமை வேகத்தில் நடைபெறும் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம்!


சென்னை பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி கூறுகையில், 4 கோடி முதல் 12 கோடி வரை பேரம் நடப்பதாகவும் கூறியுள்ளார். துணை வேந்தர் நியமனத்தில் பணம் முக்கிய பங்குவகிப்பதாகவும், அதனால் தான் இத்தனை கால தாமதம் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த வாரம் இது குறித்து அறிக்கை வெளியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ஆர்.தாண்டவன் பதவி வகித்த மூன்று வருட காலத்தில் 300 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். அதே போல் துணை பேராசிரியர் பதவிக்கு 30 லட்சம் லஞ்சமும், போராசிரியர் நியமனத்திற்கு 55 லட்சம் லஞ்சம் பெறப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

கடந்த மூன்று ஆண்டுகள் பல்வேறு ஊழல் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. துணை வேந்தர் நியமனம் செய்யப்படாததால் கல்லூரியின் கணக்குகள் அனைத்தும் பல்கலைக்கழக அதிகாரிகளே கையாளுகின்றனர் என்றும், இது குறித்து கவர்னரிடம் மனு கொடுத்துள்ளாதகவும் பசுபதி குறிப்பிட்டுள்ளார். இன்று பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் முழு நேர பதிவாளர்கள் இல்லை என்றும் அதனால் நிதி தவறான முறையில் கையாளப்படுவதாகவும் பசுபதி குற்றம்சாட்டியுள்ளார்.

அடுத்த செய்தி