ஆப்நகரம்

அரசுப்பள்ளி ஆசிாியா்கள் டியூசன் எடுப்பது சட்டவிரோதம் - நீதிமன்றம் திடீா் உத்தரவு

நியாயமான ஊதியம் பெற்றாலும், அரசு ஆசிரியர்கள் தனியாக டியூசன் எடுப்பது விதிமுறைகளுக்கு முரணானது என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தொிவித்துள்ளனா்.

Samayam Tamil 10 Apr 2019, 9:57 am
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாலியல் தொடர்பாக புகார் அளிக்க இலவச அழைப்பு எண் வசதி கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil chennai high court


கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ்.ஆர்.பி அம்மணி அம்மாள் மகிளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்ற வந்தவர் ரங்கநாதன். கடந்த 2017ம் ஆண்டு இவரை அந்த பள்ளியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள மற்றொரு பள்ளிக்கு மாற்றம் செய்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து ரங்கநாதன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

விசாரணையில், மல்லிகா என்ற தலைமை ஆசிரியை எஸ்.ஆர்.பி பள்ளிக்கு பணி மாற்றம் செய்ய கோரிக்கை வைத்திருந்ததும், அதற்காக ரங்கநாதனை மாநகராட்சி ஆணையர் இடமாற்றம் செய்திருப்பதும் தெரியவந்தது. இருப்பினும், ரங்கநாதன் வெறும் 2 கி.மீ தொலைவில் உள்ள பள்ளிக்கு தான் மாற்றம் செய்திருப்பதால், அதனால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் பாலியல் தொடர்பான புகார் அளிக்க இலவச அழைப்பு எண்னை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த புகார் எண் அடுத்த 8 வாரங்களுக்குள் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், இதில் வரும் புகார்களுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதே போல், தமிழக அரசுக்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நியாயமான ஊதியம் பெற்றாலும், அரசு ஆசிரியர்கள் தனியாக டியூசன் எடுப்பது விதிமுறைகளுக்கு முரண்பட்டது என்றனர். மேலும், அரசு ஆசிரியர்கள் இவ்வாறு தனியாக டியூசன் எடுத்தால், அவர்களுக்கு எதிராகவும், இதில் புகார் அளிக்கலாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி