ஆப்நகரம்

சட்டத்தை மீறி, கல்வியை வியாபாரமாக்கும் தனியார் கல்வி நிலையங்களின் அங்கீகாரம் ரத்து?

கல்வி உரிமை சட்டத்தில் உள்ள விதிகளை மீறி, பணம் வசூலிக்கும் தனியார் கல்வி நிலையங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி, மதுரை உயர்நீதிமன்றக் கிளை மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.

Samayam Tamil 24 Jul 2018, 6:58 pm
மதுரை: கல்வி உரிமை சட்டத்தில் உள்ள விதிகளை மீறி, பணம் வசூலிக்கும் தனியார் கல்வி நிலையங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி, மதுரை உயர்நீதிமன்றக் கிளை மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.
Samayam Tamil சட்டத்தை மீறி கல்வியை வியாபாரமாக்கும் தனியார் கல்வி நிலையங்களின் அங்கீகாரம் ரத்து?
சட்டத்தை மீறி கல்வியை வியாபாரமாக்கும் தனியார் கல்வி நிலையங்களின் அங்கீகாரம் ரத்து?


இந்தியாவில் கல்வியை வியாபாரமாக நடத்துவது சட்டப்படி குற்றமாகும். தனியார் கல்வி நிலையங்கள் இதனை சேவையாகவே செய்ய வேண்டும். கல்வி நிலையங்கள் அதன் லாபத்திற்காக செயல்படக்கூடாது என உச்சநீதிமன்றமே அறிவுரை வழங்கியுள்ளது.

இருப்பினும் அதையும் மீறி சில கல்வி நிறுவனங்கள், பெற்றோர்களிடமிருந்து அதிக அளவில் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்களுக்கு எவ்வித லாபமும் இல்லை என பொய்யான கணக்குகளை அரசிடம் காட்டி ஏமாற்றி வருகின்றன.

இதனிடையே, கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து, மாநில மற்றும் மத்திய அரசுகள் சமர்ப்பிக்க வலியிறுத்தி, உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, கல்வி உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விதிகளை மீறி, பெற்றோரிடம் அதிக பணம் வசூலிக்கும் கல்வி நிலையங்கள் கண்டறியப்பட்டால், அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றக் கிளை அறிவுரை வழங்கியுள்ளது.

அடுத்த செய்தி