ஆப்நகரம்

பி.இ., ஆன்லைன் கலந்தாய்வு தேர்வு: தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

பி.இ., ஆன்லைன் விண்ணப்ப முறைக்கு எதிரான வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 3 May 2018, 12:50 pm
பி.இ., ஆன்லைன் விண்ணப்ப முறைக்கு எதிரான வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil du-first-list_22a7ac18-186c-11e6-976e-c52fa8d2ca82


அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் 534 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளிலும், மற்ற தனியார் கல்லூரிகளிலும் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது. கடந்த பல வருடங்களாக கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில்நடத்தப்பட்டது. மாணவர்களும், பெற்றோரும் வெகு தூரம் வரவேண்டி இருந்ததால், இந்தஆண்டு (2018-2019) ஆன்லைன் மூலம் கலந்தாய்வை நடத்தஅண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது

இதற்கான அறிவிப்பை ஏற்றுக்கொண்டு தமிழக அரசு அரசாணையை வெளிட்டது. முழுமையாக கலந்தாய்வை ஆன்லைன் மூலம் நடத்தினால் கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த ஆன்லைன் கலந்தாய்வு முறைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி பாரதிதாசன் அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, மனுதாரரின் தரப்பு வழக்கறிஞர்கிராமப்புற மாணவர்களின் சிரமங்களை விவரித்தார். பல மாணவர்கள் இதனால் பி.இ., படிப்பை படிக்க முடியாமல் போகும் நிலை உருவாகும் என்று கூறினார்.

மனுதாரரின் வாதத்தைகேட்ட நீதிபதி பாரதிதாசன் அமர்வு , என்ன மாதிரியான காரணத்திற்காக ஆன்லைன்மூலம் கலந்தாய்வுநடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.மேலும் இந்த வழக்கின் விசாரணை வரும் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி