ஆப்நகரம்

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெறாமலே முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளை நடத்துவதாகவும், அதனை தடை செய்யக் கோரியும் கடந்த ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.

Samayam Tamil 9 Jun 2019, 9:06 pm
அங்கீகாரம் பெறாமல் முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளை நடத்தும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
Samayam Tamil 3320e5917c704a0a959393424431eb68


தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெறாமலே முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளை நடத்துவதாகவும், அதனை தடை செய்யக் கோரியும் கடந்த ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில் இதுபோன்ற படிப்புகளை வழங்குவது சட்டவிரோதமல்ல என்றும் மருத்துவர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணவே பல்கலைக்கழக நிர்வாக குழு இந்த முடிவை எடுத்ததாகவும் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு அல்லது மருத்துவ‌ கவுன்சில் ஒப்புதல் இல்லாமல் எந்த படிப்பையும் வழங்க முடியாது என ஏற்கெனவே நீதிமன்றம் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக மருத்துவ கவுன்சில் தரப்பு கூறியது.

வாதங்களைக் கேட்ட நீதிபதி சுந்தர், அனுமதி பெறாமல் படிப்புகளை நடத்த தடை விதித்தார். ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மதிக்காத எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த தொகையை 4 வாரத்திற்குள் செலுத்த கெடு அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி