ஆப்நகரம்

தமிழில் முதுகலை பயிலும் மாணவர்களுக்கு இலவச கல்வி: நெல்லை பல்கலைக்கழகம்!

தமிழ் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், தமிழியல் துறையில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்க முடிவு செய்துள்ளதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 13 Jun 2018, 1:00 pm
தமிழ் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், தமிழியல் துறையில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்க முடிவு செய்துள்ளதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Samayam Tamil banner-tamil
தமிழில் முதுகலை பயிலும் மாணவர்களுக்கு இலவச கல்வி: நெல்லை பல்கலைக்கழகம்!


இது தொடர்பாகப் பல்கலைக்கழகத்தின் பதிவாளரான சந்தோஷ்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு: ``தென் மாவட்டங்களில் தமிழ் முதுகலை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. அதனால் தமிழ் வளர்ச்சி தடைப்படும் என்பதால், தமிழ் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் இந்த ஆண்டுமுதல் முதுகலைப் பட்டப் பாடத்தில் சேரும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான (2018-2019) முதுகலைப் பாடத் திட்டத்தில் தமிழியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. அதனால் கட்டணம் இல்லாத இலவசக் கல்வியாக முதுகலை தமிழ் படிப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் துணைவேந்தர் பாஸ்கர் அறிவித்து இருக்கிறார்’’. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி