ஆப்நகரம்

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு: 21,23 தேதிகளில்

தமிழகத்தில் நிரப்பப்படாமல் இருக்கும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற உள்ளது.

Samayam Tamil 20 Aug 2018, 7:16 pm
தமிழகத்தில் நிரப்பப்படாமல் இருக்கும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற உள்ளது.
Samayam Tamil aiims-cnslng


தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்பட்டது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றது. அதன்படி தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு இந்த ஆண்டு ஜூலை 1 முதல் 7 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. மேலும்எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 11 முதல் 13 -ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்நிலையில் இந்த இரண்டு கலந்தயாய்வில் நிரப்பப்படாத இடங்கள் நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதுதொடர்பாகதேர்வு குழுவியின் செயலாளர்டாக்டர் ஜி செல்வராஜன் கூறுகையில் ‘ மிக சொற்ப இடங்களே நிரப்பபடாமல் இருக்கிறது. இந்த கலந்தாய்வு செவ்வாய் மற்றும் வியாழன்கிழமைகளில் நடைபெறும் என்று கூறினார்.

அடுத்த செய்தி