தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கவுன்சிலிங் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட அட்டவணை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
இதன்படி தனியார் மருத்துவக் கல்லூரி கவுன்சிலிங் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இதில், 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 432 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நாளை நடைபெறும் கவுன்சிலிங்கில் தமிழகத்தைப் பூர்வீகமாககக் கொண்டு மலையாளம் அல்லது தெலுங்கை தாய் மொழியாக படித்து, 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.
நீட் தரவரிசை 2,520 முதல் 18,915 வரை பெற்ற சிறுபான்மையின மாணவர்களைத் தவிர வேறு மாணவர்கள் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டாம் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட அட்டவணை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
இதன்படி தனியார் மருத்துவக் கல்லூரி கவுன்சிலிங் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இதில், 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 432 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நாளை நடைபெறும் கவுன்சிலிங்கில் தமிழகத்தைப் பூர்வீகமாககக் கொண்டு மலையாளம் அல்லது தெலுங்கை தாய் மொழியாக படித்து, 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.
நீட் தரவரிசை 2,520 முதல் 18,915 வரை பெற்ற சிறுபான்மையின மாணவர்களைத் தவிர வேறு மாணவர்கள் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டாம் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவித்துள்ளது.