ஆப்நகரம்

5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு.. அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு

Minister Sengottaiyan: தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது பற்றிய சர்ச்சைகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

Samayam Tamil 27 Nov 2019, 2:01 pm
தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்படி நடைபெறும், வினாத்தாள் தயாரிப்பு பற்றி அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
Samayam Tamil Tamil Nadu Public Exam


சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (நவ.27) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ‘தனியார் பள்ளிகளில் டிசம்பர் மாதம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என்றால், அதே போன்று அரசுப்பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடத்த தயாராக உள்ளோம். அண்மையில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. எனவே, மாணவர்கள் சேர்க்கையை பொறுத்தவரையில், எப்போது வேண்டுமானாலும் நடைபெறும் வகையில் அரசு ஒத்துழைப்பு வழங்குகிறது.

இதையும் பார்க்க:

5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லை என்று நான் கூறவில்லை. ஏற்கனவே அறிவித்தபடி, தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும். அந்த பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு ஒரே மாதிரியான கேள்வித்தாள்கள் தயாரித்து அனுப்பப்படும். இந்த பொதுத்தேர்வு மூலம் மாணவர்கள் இடைநிற்றல் (பாதியில் படிப்பை நிறுத்துவது) இருக்காது.

மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாடு பற்றி தெரிந்து கொள்வதற்காகவே 5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. எனவே, மாணவர்கள், பெற்றோர்கள் இந்த பொதுத்தேர்வு குறித்து பீதியடைய வேண்டாம். தேர்வுக்காக வேறு பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டிய அவசியமில்லை. தேர்வுகள் அனைத்தும் ஆசிரியர்கள் மூலம் அந்தந்த பள்ளிகளிலே நடத்தப்படும்’. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் செருப்புக்கு பதிலாக ‘ஷூ’ வழங்க ஒப்புதல்!

அடுத்த செய்தி