சென்னை: கிறித்துவர், இஸ்லாமியர் புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி மதத்தினர் மற்றும் ஜெயின் வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ மாணவிகள் பள்ளிக்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிவிப்பில், சென்னையில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் கிறித்துவர், இஸ்லாமியர் புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி மதத்தினர் மற்றும் ஜெயின் வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ மாணவிகள் பள்ளி கல்வி உதவித்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறலாம். இதனைப் பெற, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2016 என்றும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிவிப்பில், சென்னையில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் கிறித்துவர், இஸ்லாமியர் புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி மதத்தினர் மற்றும் ஜெயின் வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ மாணவிகள் பள்ளி கல்வி உதவித்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறலாம். இதனைப் பெற, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2016 என்றும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.