ஆப்நகரம்

நாடார் சமூக விவகாரம்: சிபிஎஸ்இ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பாட புத்தகத்தில் நாடார் சமுதாயம் குறித்து இடம்பெற்றுள்ள சர்ச்சையான கருத்துகளை நீக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் 3 மாதங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என சிபிஎஸ்இ மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 16 Nov 2016, 4:58 pm
சென்னை: பாட புத்தகத்தில் நாடார் சமுதாயம் குறித்து இடம்பெற்றுள்ள சர்ச்சையான கருத்துகளை நீக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் 3 மாதங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என சிபிஎஸ்இ மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil nadar community issue chennai hc orders cbse
நாடார் சமூக விவகாரம்: சிபிஎஸ்இ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயம் குறித்து இடம்பெற்றுள்ள சர்ச்சையான கருத்துகளை நீக்க கோரி தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிபிஎஸ்இ-யின் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், குமரி மாவட்ட நாடார் சமுதாய மக்கள் சாணார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் எனவும், அச்சமுதாய பெண்கள் மேலாடை அணிய தடை விதிக்கப்பட்டிருந்ததாலயே பலர் கிறித்தவ மதத்திற்கு மாறியதாக கூறப்பட்டுள்ளது. எனவே, உண்மைக்கு மாறான இந்த பகுதிகளை பாடத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் வாதிட்டார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பல ஆண்டுகள் ஆகியும் இந்த விவகாரத்தில் தீர்வு எட்டப்படவில்லை. எனவே மூன்று மாத காலத்துக்குள் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும் என சி.பி.எஸ்., மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சிலுக்கு உத்தரவிட்டனர்.
Nadar community issue: Chennai HC orders CBSE

அடுத்த செய்தி