ஆப்நகரம்

தனியார் பள்ளிகளில் இந்தி மொழி ஏன்? : தமிழக அரசுக்கு நீதிமன்றம் சாட்டையடி

நவோதயா பள்ளிக்கு ஏதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசு தனியார் பள்ளிகளில் இந்தி மொழியை கற்க அனுமதிப்பது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

TNN 21 Jun 2017, 3:14 pm
சென்னை : நவோதயா பள்ளிக்கு ஏதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசு தனியார் பள்ளிகளில் இந்தி மொழியை கற்க அனுமதிப்பது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil navothaya school case
தனியார் பள்ளிகளில் இந்தி மொழி ஏன்? : தமிழக அரசுக்கு நீதிமன்றம் சாட்டையடி


கிராமப்புற மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் கல்வி கற்கும் நோக்கத்தோடு ஜவகர் நவோதயா பள்ளிகள் துவங்கப்பட்டன. இந்த பள்ளிகளில் அந்த மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகள் கற்பிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்கள் சிறப்பாக இயங்கும் இந்த பள்ளியை தமிழகத்தில் துவங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது இன்று விசாரணை நடைப்பெற்றது. அப்போது நவோதயா பள்ளியை தமிழக அரசு அனுமதிக்க மறுப்பது ஏன் என்று நிதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர் ,தமிழகத்தில் இருமொழிக் கொள்கை உள்ளதாகவும், நவோதய பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படும் என்பதால், அவற்றை தமிழகத்தில் அமைக்க முடியாது எனத்கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் இருமொழிக் கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது எனக் கூறும் நிலையில், தனியார் பள்ளிகளில் இந்தி மொழியை கற்பிப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினர்.மேலும் தனியார் பள்ளிகளில் வசதி உள்ளவர்கள் மட்டுமே படித்து வரும் நிலையில், ஏழைகளுக்கு தரமான கல்வி கிடைக்கக் கூடாதா எனவும் கேள்வி எழுப்பினர்.

அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜுலை 3ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அடுத்த செய்தி