ஆப்நகரம்

இந்திய கடற்படையில் சேர 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓர் வாய்ப்பு

இந்திய கடற்படையில் சமையல் மற்றும் சுகாதார பணிகளுக்க்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TNN 19 Dec 2016, 5:31 pm
இந்திய கடற்படையில் சமையல் மற்றும் சுகாதார பணிகளுக்க்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு படித்தவர்களும், 6ஆம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil navy recruitment for sslc pass
இந்திய கடற்படையில் சேர 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓர் வாய்ப்பு


இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சி நுழைவுகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் படைப்பிரிவில் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். தற்போது சமையல் மற்றும் சுகாதார பணிகளுக்கான காலிப்பணியிடங்களில் சேர தகுதியான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக இதற்கு இந்திய குடியுரிமை பெற்ற திருமணம் ஆகாத இளைஞர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரர்கள் 1-10-1996 மற்றும் 30-9-2000 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். 10-ம் வகுப்பு (மெட்ரிகுலேசன்) தேர்ச்சி பெற்றவர்களும், 6-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஆரம்பகட்ட தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையளவும் இருக்க வேண்டும். மார்பு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும். http://www.joinindianavy.gov.inஎனும் இணையதளத்தில் இருக்கும் விண்ணப்பங்களில் சரியான தகவல்களை கொண்டு பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 2 கணினி பிரதி எடுத்து, அதில் ஒன்றில் புகைப்படம் ஒட்டி, சான்றொப்பமிட்டு, தேவையான சான்றிதழ்களை இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்: 2-1-2017. விண்ணப்பங்கள் அலுவலகங்களுக்கு சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 9-1-2017. இது பற்றிய விரிவான விவரங்களை www.joinindianavy.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

அடுத்த செய்தி