ஆப்நகரம்

நீட் நுழைவுத்தேர்வு எழுத கூடுதல் மையங்கள் அறிவிப்பு!

நீட் நுழைவுத்தேர்வு எழுத கூடுதல் மையங்கள் அறிவிப்பு!

TNN 24 Mar 2017, 11:11 pm
சென்னை : மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நடத்த இந்தியா முழுவதும் கூடுதலாக 23 நகரங்களை சேர்த்திருப்பதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
Samayam Tamil neet cbse adds three more cities as exam centres in tn
நீட் நுழைவுத்தேர்வு எழுத கூடுதல் மையங்கள் அறிவிப்பு!


நாடு முழுவதும் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான நுழைவுத்தேர்வு 103 இடங்களில் நடைபெற இருப்பதாக மத்திய கல்வி நிறுவனமான சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடும் போது இந்த வருடம் 41.41 சதவீதம் மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளதால் புதிய தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்வு மையங்களாக சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருச்சி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக, நாமக்கல், நெல்லை மற்றும் வேலூர் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 8,02,594 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த வருடம் 11,35, 104 பேர் விண்ணப்பித்துள்ளனர். மார்ச் 24 முதல் 27 வரை http://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு மையத்தை தெரிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே தேர்வு மையத்தை தேர்வு செய்திருந்தாலும் தற்போது மாற்றி பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. ஒரு முறை தேர்வு மையத்தை பதிவு செய்துவிட்டால் அதன்படி வரிசை எண் வழங்கப்படும். நீட் தேர்வு தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், அசாமிஸ், பெங்காலி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, ஒடியா, கன்னடா ஆகிய பத்து மொழிகளில் நடத்தப்படுகிறது.

அடுத்த செய்தி