ஆப்நகரம்

நீட் தோ்வு: வெளிமாநிலங்களுக்கு செல்பவா்களுக்கு 1500 நிவாரணம் – நாராயணசாமி

நீட் தோ்வை எழுத புதுச்சோியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவா்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.1500 பயணப்படியாக வழங்கப்படும் என்று மாநில முதல்வா் நாராயணசாமி தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 5 May 2018, 1:06 pm
நீட் தோ்வை எழுத புதுச்சோியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவா்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.1500 பயணப்படியாக வழங்கப்படும் என்று மாநில முதல்வா் நாராயணசாமி தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Narayanasamy-cm.jpg.image.975.568


மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வு நாளை நாடுமுழுவதும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சோி மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு மாணவா்களுக்கு அவா்களது சொந்த மாநிலங்களில் தே்ாவு மையங்கள் ஒதுக்கப்படவில்லை. அவா்களுக்கு கேரளா, ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் மாணவா்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் புதுச்சோி முதல்வா் நாராயணசாமி இன்று காலை செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், நீட் தோ்வு மையங்களை அவரவா் மாநிலங்களுக்குள் ஒதுக்குமாறு சி.பி.எஸ்.இ.க்கு கோாிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அந்த கோாிக்கை நிராகாிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவா்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனா். வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவா்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,500 பயணப்படியாக வழங்கப்படும். தே்ாவுக்கான நேரம் நெருங்கிவிட்டதால் மாணவா்கள் தே்ாவை முடித்துவிட்டும் கூட பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

மத்திய அரசு தமிழகத்தையும், புதுச்சோியையும் மாற்றாந்தாய் மனப்பாண்மையுடன் நடத்துகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கப்படாமல் காலம் தாழ்த்துவதற்கு எந்தெந்த பணிகளை மேற்கொள்ள வேண்டுமோ அவை அனைத்தையும் மத்திய அரசு மேற்கொள்கிறது. பிரதமா் மோடிக்கு மக்களின் குறைகளை கேட்க நேரமில்லை என்று அவா் குற்றம் சாட்டியுள்ளாா்.

அடுத்த செய்தி