ஆப்நகரம்

மது கடை திறக்க இடம் இருக்கிறது. நீட் தேர்வு நடத்த இடமில்லையா - கார்த்திக் சுப்பராஜ் காட்டம்!

நாடுமுழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தோ்வு வருகிற ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. இதற்காக தமிழத்தில் 10 இடங்களில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல மாணவர்கள் வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 5 May 2018, 7:50 pm
சென்னை : நாடுமுழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தோ்வு வருகிற ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. இதற்காக தமிழத்தில் 10 இடங்களில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல மாணவர்கள் வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil karthik subaraj


தமிழகத்தில் சென்னை, கோவை, காஞ்சிபுரம், நாமக்கல், மதுரை, சேலம், திருவள்ளூா், திருச்சி, நெல்லை, வேலூா் ஆகிய 10 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான் என வெளிமாநிலங்களிலும் தேர்வு மையங்கள் போடப்பட்டுள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் காட்டம் :
இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கார்த்திக் சுப்புராஜ்,, “தமிழ் நாட்டில் தெருவெங்கும் டாஸ்மாக் கடையை திறக்க இடங்கள் கிடைக்கும் அரசுக்கு, நீட் தேர்வு நடத்த இடம் கிடைக்கவில்ல என கூறுவது, அநியாயம், அட்டூழியத்தின் புதிய உச்ச கட்டம். இதை கடுமையாக எதிர்க்கிறோம்,



கடந்தாண்டு நீட் வேண்டாம் என சொன்ன நாமே, தமிழகத்தில் நீட் தேர்வு நடத்த வேண்டும்... என சொல்ல வைத்துவிட்டனர்.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி