ஆப்நகரம்

நீட் தேர்வில் உள்ளாடை கலைந்து சோதனை: 4 ஆசிரியைகள் சஸ்பென்ட்!!

கேரளா மற்றும் தமிழகத்தில் நடந்த நீட் தேர்வின்போது பெண்களின் உள்ளாடைகளைக் கலைந்து சோதனை நடத்தப்பட்ட சம்பவத்தில் 4 கண்ணூர் ஆசிரியயைகள் பணியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

TOI Contributor 9 May 2017, 2:17 pm
கேரளா மற்றும் தமிழகத்தில் நடந்த நீட் தேர்வின்போது பெண்களின் உள்ளாடைகளைக் கலைந்து சோதனை நடத்தப்பட்ட சம்பவத்தில் 4 கண்ணூர் ஆசிரியயைகள் பணியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil neet exam inner wear removed 4 kannur schoolteachers suspended
நீட் தேர்வில் உள்ளாடை கலைந்து சோதனை: 4 ஆசிரியைகள் சஸ்பென்ட்!!


கடந்த 7 ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் நீட் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வின்போது, மாணவர்களின் முழுக் கை சட்டையை அரைக் கை சட்டையாக வெட்டி தேர்வு மையத்துக்குள் அனுப்பப்பட்டனர். மேலும், பெண்களின் கம்மலை கழற்றியது, துப்பாட்டாவை கழற்ற சொன்னது, ஜீன்ஸ் அணிய தடை விதித்தது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். பெண்களின் உள்ளாடைகள் கலையப்பட்டு சோதிக்கப்பட்டனர். இது தேசிய அளவில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள நீட் தேர்வு மையத்தில் பெண்களின் உள்ளாடைகளை கலைந்து சோதனை நடத்தப்பட்டது. இதற்கு மாநில முதல்வர் பினராய் விஜயன் கடுமையான கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் கூவாப்ரம் அருகே குன்ஹிமங்களம் என்ற இடத்தில் இருக்கும் டிஐஎஸ்கே ஆங்கில மொழி வழி பள்ளியின் ஆசிரியைகள் சீஜா, சஃபீனா, பிந்து மற்றும் ஷஹினா ஆகியோர் பணியில் இருந்து இன்று சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இந்த விஷயத்தில் பலத்த சர்ச்சை எழுந்த நிலையில் பள்ளி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த விஷயத்தில் கேரளாவின் குழந்தைகள் நல உரிமை கமிஷனும், கேரள மனித உரிமைகள் கமிஷனும் சிபிஎஸ்இ-யிடம் இருந்து விரிவான அறிக்கையை 10 நாட்களுக்குள் கேட்டுள்ளது. மேலும் சிபிஎஸ்இ மீது கேரள மனித உரிமைகள் கமிஷன் தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இத்துடன் உயர்நிலை விசாரணை வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

NEET Exam inner wear removed: 4 Kannur schoolteachers suspended

அடுத்த செய்தி