ஆப்நகரம்

நீட் ஆள்மாறாட்டம்: மாணவர் உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் உதித்சூர்யாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 17 Oct 2019, 12:56 pm
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித்சூரயா ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அவருடைய வயதையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
Samayam Tamil madurai court


மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் தற்போது 4 மாணவர்கள் உட்பட 6 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரனை நடத்தி வருகிறது. இந்த நிலையில், முதலில் சிக்கிய மாணவர் உதித்சூர்யா, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

முக்கிய செய்தி: இனி வருடத்துக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்த வாய்ப்பு!

இந்த வழக்கு விசாரணை இன்று ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வுக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீட் ஆள்மாறாட்டத்தில் வசூல் ராஜா திரைப்பட பாணியில், மாணவர் உதித்சூர்யாவின் தந்தை நடந்திருக்கிறார். அவர் தான் முக்கிய குற்றவாளி. தற்போது நீட் ஆள்மாறாட்ட முறைகேடு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

இருப்பினும், மாணவர் உதித்சூர்யாவின் வயதையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்படுகிறது. அவரது தந்தை வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்க முடியாது. உதித்சூர்யா தினமும் காலை 10.30 மணியளவில் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு வந்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் கையெழுத்திட்டு செல்ல வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி