ஆப்நகரம்

Kalpana Kumari: நீட் தேர்வு முடிவில் பீகார் மாணவி கல்பனா குமாரி இந்தியளவில் முதலிடம்

நாடு முழுவதும் வெளியிடப்பட்ட நீட் தேர்வு முடிவில் 720க்கு 691 மதிப்பெண்கள் பெற்ற பீகாரை சேர்ந்த கல்பனா குமாரி தேசியளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

Samayam Tamil 4 Jun 2018, 3:15 pm
நாடு முழுவதும் வெளியிடப்பட்ட நீட் தேர்வு முடிவில் 720க்கு 691 மதிப்பெண்கள் பெற்ற பீகாரை சேர்ந்த கல்பனா குமாரி தேசியளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
Samayam Tamil neet-delhi-student-scores-topper
கல்பனா குமாரி , நீட் தேர்வில் முதலிடம் பிடித்தவர்


இந்தாண்டிற்கான நீட் மருத்துவ நுழைவுத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த மே 6 நடத்தியது. நாடு முழுவதும் நடைபெற்ற இந்த தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 1.07 லட்சம் மாணவர்கள் உட்பட இந்தியளவில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.

இந்நிலையில் இதற்கான முடிவுகள் ஜூன் 5ல் (நாளை) வெளியிடும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்த நிலையில், அதை இன்று மதியம் 12.30 மணியளவில் www.cbseneet.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிட்டது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நீட் தேர்வு முடிவில் கல்பனா குமாரி என்ற மாணவி 720-க்கு 691 மதிப்பெண்கள் எடுத்து தேசியளவில் முதலிடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

மாணவி கல்பனா குமாரி இயற்பியலில் 180க்கு 171 வேதியியலில் 180க்கும் 160 உயிரியல், விலங்கியலில் 360க்கு 360 மதிப்பெண்கள் எடுத்து 99.99 சதவீதம் பெற்றுள்ளார்.

இதனிடையே நீட் தேர்வில் ஓசி பிரிவுக்கு 119, ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 96 மதிப்பெண்கள் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி