ஆப்நகரம்

பயோமெட்ரிக் முறை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு

அரசு மற்றும் அரசு நிதிபெறும் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை அமலாக இருப்பதால், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் (Upload) செய்யப்பட வேண்டும்.

Samayam Tamil 11 May 2019, 9:57 am
அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை நடைமுறைக்கு வரவுள்ளதால், ஆசிரியர்களின் விவரங்களை விரைந்து பதிவேற்றம் செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
Samayam Tamil 63517


வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகமாக இருக்கிறது. இதனை முன்னிட்டு, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் அறிவுரைகளை வழங்கினார்.

அப்போது, அனைத்து பள்ளிகளிலும் ஈஎம்ஐஎஸ் (EMIS) எனப்படும் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையத்தின் இணையத்தளத்தில் தகவல்களை முழுமையாக பதிவிட அறிவுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் மாணவர்களின் திட்டங்களும், ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகளும் நடைபெற உள்ளன. எனவே, பள்ளி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அனைத்து தகவல்களும் பதிவேற்றப்பட வேண்டும்.

அரசு மற்றும் அரசு நிதிபெறும் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை அமலாக இருப்பதால், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் (Upload) செய்யப்பட வேண்டும்.

அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. எனவே, மாணவர்களின் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவேற்றும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் பிரதீவ் யாதவ் கூறியிருக்கிறார்.

அடுத்த செய்தி